திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

இன்றைய செய்திகள் ஜூன் 2 - நேரலை!

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள இணைந்திருங்கள்.

News image

கே. அண்ணாமலை. - கோப்புப் படம்

Updated On :3 ஜூன் 2026, 9:57 pm IST

அமெரிக்கா - ஈரான் இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

லெபனான், காஸா மீதான இஸ்ரேலின் தொடர் தாக்குதலைக் கண்டித்து அமெரிக்கா உடனான அனைத்துத் தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தைகளையும் நிறுத்திவைப்பதாக ஈரான் அறிவித்ததைத் தொடர்ந்து, இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

மகாராஷ்டிராவில் விவசாயிகளுக்கு ரூ. 2 லட்சம் வரையிலான பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய அமைச்சரவையில் இன்று (ஜூன் 2) ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இதற்காக ரூ. 36,585 கோடி நிதியை மாநில அரசு ஒதுக்கியுள்ளது. 2019 ஏப்ரல் 1 முதல் 2026 மார்ச் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கடன் வாங்கிய விவசாயிகளுக்கு இந்தக் கடன் தள்ளுபடி பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலைக் கல்வி வாரிய (சிபிஎஸ்இ) விவகாரத்தில் மாணவர்கள் மீது அக்கறை இருந்தால் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை பிரதமர் பதவி நீக்கம் செய்திருப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

கேரளம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால் போதைப்பொருள் பரவல் என்று அந்த மாநில முதல்வர் வி.டி. சதீசன் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆளுநரின் செயலாளராக சஜன் சிங் சவான் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் ஆட்சியராக இருந்த சரவணன் சென்னை மாநகராட்சி புதிய இணை ஆணையராகவும், நிதித் துறை ஆணையராக இருந்த பிரதீவ்ராஜ் கரூர் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் கணவரை முதுகில் சுமந்து கொண்டு மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை சென்றார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தில் முதல்வர் வி.டி. சதீசன் மெளனம் காப்பதாக மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் எம்.வி. கோவிந்தன் இன்று (ஜூன் 2) குற்றம் சாட்டினார்.

கடந்த 11 நாள்களில் மட்டும் ரூ. 8 வரை பெட்ரோல் விலை உயர்ந்துள்ளதாகவும், எதிர்க்கட்சியாக இருக்கும்போது மாபெரும் போராட்டத்தை நடத்தியவர் தற்போது ஆட்சியில் அமர்ந்ததும் அமைதியாகிவிட்டதாகவும் விமர்சித்தார்.

மேற்கு வங்கத்தில் 177 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, பாஜக முறைகேடு செய்து வெற்றிபெற்றதாக திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மமதா பானர்ஜி செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் தற்போதைய சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கு திமுக எப்படி காரணமாகும் என அக்கட்சியின் துணை பொதுச் செயலாளர் ஆ. ராசா இன்று (ஜூன் 2) கேள்வி எழுப்பினார்.

தமிழ்நாட்டின் புதிய ஆட்சி அமைந்த பிறகு, புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்ட பிறகு குற்றச் சம்பவங்கள் நடைபெற்றால், அதற்கு திமுக மீது பழி போடுவது எந்த வகையில் நியாயம் எனவும் வினவியுள்ளார்.

முதல்வர் விஜய்க்கு அரசியல் புரிதல் இல்லை என என திமுக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா இன்று (ஜூன் 2) குற்றச்சாட்டினார்.

எனக்கு நல்லா வார்த்தை வந்துவிடும் என்கிறார்? இது ஒரு முதல்வர் பேசக்கூடிய முறையா?

மேடையில் கையை ஆட்டிப் பேசுவதைப்போன்று சட்டப்பேரவையில் உதயநிதியின் கேள்விகளுக்கு ஏன் விஜய்யிடம் பதில் இல்லை?

Summary

பஞ்சாப் மாநில காங்கிரஸில் தலைமை மாற்றத்தை மேற்கொள்ளக் கட்சி பரிசீலித்து வருவதாக எழுந்த ஊகங்களை, அம்மாநில பொறுப்பாளரான காங்கிரஸ் பொதுச் செயலாளர் பூபேஷ் பாகேல் நிராகரித்தார்.

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் தொடர்புடையதாகக் குற்றம் சாட்டப்பட்ட பி.வி. குல்கர்னி என்பவருக்கு சொந்தமான கட்டடத்தின் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதிகள் செவ்வாய்க்கிழமை இடிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் இன்று 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அக்கட்சியின் முன்னாள் மாநில தலைவர் கே. அண்ணாமலை விலகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் 2,000 ஆண்டுகள் பழமையான முதல் தமிழி நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்படுக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் ரத்ன குமாரின் 29 திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்துப் பேசினார்.

சென்னை தலைமைச் செயலகம் சுற்றுப் பகுதிகளில் திடீர் புகைமூட்டம் ஏற்பட்டதால், அங்கிருக்கும் மக்களுக்கு சுவாசிக்க சிரமம் ஏற்பட்டது.

சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய்யை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை அடிப்படையில் முதல்வர் ஜோசப் விஜய்க்கு எதிராக வழக்குப்பதியக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாரரே திரும்பப் பெற்றுக் கொண்டார்.

சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண் மறுமதிப்பீடு இணையதளத்தை மத்திய கல்வி அமைச்சகம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.

பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை இன்று(ஜூன் 2) சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றமில்லாமல் இன்று(ஜூன் 2) விற்பனை செய்யப்படுகிறது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனான தொலைப்பேசி உரையாடலின்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்ததாக ஆக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.