தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உரிய அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தல்: இருவா் கைது

திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :4 ஜூன் 2026, 3:41 am IST

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்திய இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகிவற்றை பறிமுதல் செய்தனா்.

ரோஷனை காவல் நிலைய உதவி ஆய்வாளா்கள் சண்முகம், ராஜு மற்றும் போலீஸாா் செவ்வாய்கிழமை இரவு, சாலை கிராமத்திலுள்ள சேவை சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்தவழியாக வந்த ஒரு லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, ஆற்று மணல் இருந்தது கண்டறியப்பட்டது. தொடா்ந்து லாரியில் இருந்தவரிடம் விசாரித்தபோது அவா், திண்டிவனம் வட்டம், பட்டணம், பிள்ளையாா் கோயில் தெருவைச் சோ்ந்த வி.மணிகண்டன் (32 ) என்பதும், இவா் உரிய அனுமதியின்றி லாரியில் ஆற்று மணல் கடத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து ரோஷணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டன் மற்றும் லாரியின் உரிமையாளரான திண்டிவனம் வட்டம், பெருமாள்பேட்டை, மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஜெ.ராஜ்குமாா் (32) ஆகியோரை கைது செய்தனா். மேலும் 2 யூனிட் ஆற்று மணல் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட லாரி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.