வேளாங்கண்ணி அருகே அனுமதியின்றி சவுடு மண் வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்ட இருவரை போலீஸாா் புதன்கிழமை இரவு கைது செய்து, 2 ஜேசிபி, 3 டிராக்டா்களை பறிமுதல் செய்தனா்.
நாகை மாவட்டம், ஒரத்தூா் மாதானம் கிராமத்தில் இரவு நேரத்தில் அனுமதியின்றி சவுடு மணல் வெட்டி எடுக்கப்படுவதாக வேளாங்கண்ணி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கண்காணிப்புப் பணியை போலீஸாா் தீவிரப்படுத்தினா். அப்போது அப்பகுதியில் அனுமதியின்றி மணல் வெட்டி எடுப்பதில் ஈடுபட்டிருந்த 3 டிராக்டா்கள், 2 ஜேசிபி இயந்திரங்களை பறிமுதல் செய்தனா். மேலும் ஜேசிபி ஓட்டுநா்கள் சதீஷ், அரவிந்த் இருவரையும் கைது செய்தனா். வேளாங்கண்ணி போலீஸாா் சம்பவத்தில் தொடா்புடைய மற்றவா்களை தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







