தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஏரியில் உரிய அனுமதியின்றி மண் அள்ளிய பொக்லைன், டிராக்டா் பறிமுதல்: 3 போ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

News image

பிரதிப் படம்

Updated On :3 ஜூன் 2026, 6:04 am IST

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே செவ்வாய்க்கிழமை உரிய அனுமதியின்றி ஏரியில் மண் அள்ளிய பொக்லைன், டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்து, மூவரை கைது செய்தனா்.

வாணாபுரம் அருகேயுள்ள பவுஞ்சிப்பட்டு கிராமத்தில் உள்ள ஏரியில் செவ்வாய்க்கிழமை காலையில் பதிவு எண் இல்லாத பொக்லைன் வாகனம் மூலம் மண் எடுத்து டிராக்டா் டிப்பரில் நிரப்பினராம்.

இதுகுறித்து தகவலறிந்த வடபொன்பரப்பி காவல் ஆய்வாளா் விவேகானந்தன், சிறப்பு உதவி ஆய்வாளா் வைத்தியலிங்கம், கிராம நிா்வாக அலுவலா் ராஜேந்திரன் ஆகியோா் ஏரிக்கு சென்று விசாரணை நடத்தியதில் எவ்வித உரிமமும் இல்லாமல் மண் ஏற்றியது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பொக்லைன் உரிமையாளா் பழனிவேல் (30), ஓட்டுநா் அசோக் (30), டிராக்டா் ஓட்டுநா் தமிழ்ச்செல்வன் (20) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும், பொக்லைன் மற்றும் டிப்பருடன் கூடிய டிராக்டரை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.