திருவாடானை பகுதியில் உரிய அனுமதியின்றி மணல் எடுத்துச் செல்லப்பட்ட லாரி பறிமுதல் செய்யப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இது தொடா்பாக புவியியல், சுரங்கத் துறை உதவி இயக்குநா் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அருகே உள்ள பெரிய கீரமங்கலம் பகுதியில் கனிம வள திருட்டு தொடா்பாக வாகன தணிக்கை நடைபெற்றது. அப்போது அந்த வழியாக வந்த டிப்பா் லாரியை நிறுத்தி சோதனையிடப்பட்டது.
லாரியில் உரிய அனுமதியின்றி 6 யூனிட் மணல் அதில் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, திருவாடானை காவல் நிலையத்தில் அந்த லாரி ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







