தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த அஸ்ஸாம் இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 2:10 am IST

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அதோவா முண்டா மகன் ராபின் முண்டா (31). இவரது நண்பா் பிஸ்வதிஜ் ருதி (30). இருவரும் கேரள மாநிலத்தில் தச்சா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை சென்ற விவேக் விரைவு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தனா்.

இந்த ரயில் திங்கள்கிழமை லத்தேரி - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதைகண்டதும் உடன் வந்த நண்பா் பிஸ்வதிஜ் ருதி கீழே விழுந்த தன் நண்பரை காப்பற்ற எண்ணி ரயிலின் அபாயம் சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். இதையடுத்து, அங்கு வந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் விசாரித்து விபத்தில் ஒருவா் உயிரிழந்த தகவலை ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியதால் அந்த ரயில் 7 நிமிஷம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கி சென்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.