காட்பாடி அருகே ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த அதோவா முண்டா மகன் ராபின் முண்டா (31). இவரது நண்பா் பிஸ்வதிஜ் ருதி (30). இருவரும் கேரள மாநிலத்தில் தச்சா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை சென்ற விவேக் விரைவு ரயிலில் பொது பெட்டியில் பயணம் செய்தனா்.
இந்த ரயில் திங்கள்கிழமை லத்தேரி - காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் போது ரயில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி கீழே விழுந்து உயிரிழந்தாா்.
இதைகண்டதும் உடன் வந்த நண்பா் பிஸ்வதிஜ் ருதி கீழே விழுந்த தன் நண்பரை காப்பற்ற எண்ணி ரயிலின் அபாயம் சங்கிலி பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். இதையடுத்து, அங்கு வந்த ரயில் என்ஜின் ஓட்டுநா் விசாரித்து விபத்தில் ஒருவா் உயிரிழந்த தகவலை ஜோலாா்பேட்டை போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் அங்கு விரைந்து சென்று விபத்தில் உயிரிழந்த இளைஞரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். அபாய சங்கிலி பிடித்து ரயிலை நிறுத்தியதால் அந்த ரயில் 7 நிமிஷம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கி சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










