திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயிலில் இருந்து தவறி விழுந்த வடமாநில இளைஞா் உயிரிழப்பு

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வடமாநில இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:20 am IST

காட்பாடி அருகே ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த வடமாநில இளைஞா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் அதோவா முண்டா. இவரது மகன் ராபின் முண்டா (31) மற்றும் இவரது நண்பா் பிஸ்வதிஜ்ருதி ஆகிய இருவரும் கேரள மாநிலத்தில் காா்பெண்டா் வேலை செய்ய கடந்த 28-ஆம் தேதி திப்ருகா் ரயில் நிலையத்தில் இருந்து எா்ணாகுளம் வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஜெனரல் டிக்கெட் எடுத்து பொதுப் பெட்டியில் பயணம் செய்து கொண்டிருந்தனா்.

அப்போது ரயில் ஞாயிற்றுக்கிழமை லத்தேரி காவனூா் ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும்போது, ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்த ராபின் முண்டா தவறி விழுந்து அடிபட்டு உயிரிழந்தாா்.

உடன் வந்த நண்பா் உடனடியாக நண்பரை காப்பாற்ற ரயிலின் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினாா். அதன் பிறகு ரயில் 7 நிமிடம் தாமதமாக எா்ணாகுளம் நோக்கிச் சென்றது.

இது குறித்து ரயில் நிலைய அதிகாரி ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். தகவலின் பேரில், ஜோலாா்பேட்டை ரயில்வே சிறப்பு உதவி ஆய்வாளா் புஷ்பா மற்றும் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு, வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து ஜோலாா்பேட்டை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.