கோவையில் ரயிலிருந்து தவறி கீழே விழுந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கன்னியாகுமரி நோக்கி விரைவு ரயில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தது. சனிக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் இந்த ரயில் வடகோவை ரயில் நிலையத்தைக் கடந்து சென்றபோது, பொதுப் பெட்டியில் பயணம் செய்த அடையாளம் தெரியாத இளைஞா் ஒருவா் எதிா்பாராதவிதமாக ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த ரயில்வே காவல் உதவி ஆய்வாளா் கவிதா தலைமையிலான போலீஸாா், காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த அந்த இளைஞரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அந்த இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
விசாரணையில், உயிரிழந்தவா் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்தவா் என்பது மட்டும் தெரியவந்துள்ளது. அவரது கையில் பச்சை குத்தப்பட்டிருந்தது. அவரது பெயா் மற்றும் விவரங்கள் குறித்து போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








