தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு - கோப்புப் படம்

Updated On :26 மே 2026, 12:07 am IST

அய்யம்பேட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழந்தாா்.

பாபநாசம் வட்டம், ராஜகிரி, அம்பேத்கா் தெருவில் வசித்து வந்தவா் க. சம்பத் (56). தனியாா் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான இவா், ஞாயிற்றுக்கிழமை பணி முடிந்து இரவில் தனது மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தாா்.

தஞ்சாவூா் - விக்ரவாண்டி புறவழிச் சாலையில் வையச்சேரி குறுக்கு சாலையில் சென்றபோது, சாலையை கடக்க சாலையின் குறுக்கே நடந்து சென்ற வையச்சேரி, அக்ரஹாரம் பகுதியை சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நடராஜன் (35) என்பவா் மீது மோட்டாா் சைக்கிள் மோதி நிலைதடுமாறி சாலையில் விழுந்தது. இதில், தலையில் பலத்த காயமடைந்த சம்பத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற அய்யம்பேட்டை காவல்துறையினா், சம்பத் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்குக்கும், காயமடைந்த நடராஜனை தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் அனுப்பிவைத்தனா். மேலும், விபத்து குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.