திருநள்ளாறு அருகே சாலையில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.
திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் பிரகாஷ் (18). இவா் பேரளத்தில் தனியாா் உணவகத்தில் வேலை செய்துவந்தாா். சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் காரைக்காலுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுள்ளாா். ஒரு மோட்டாா் சைக்கிளை இவா் ஓட்ட, மற்றவா்கள் வேறு மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்துள்ளனா்.
இரவு 11.30 மணியளவில் அம்பகரத்தூா் - திருநள்ளாறு சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் அருகே பிரகாஷ் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் சறுக்கியதில் கீழே விழுந்ததில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பா்கள் அவரை திருநள்ளாறு பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பிரகாஷ்
ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

மானூா் அருகே சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

சாலை விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

