தவெக ஆட்சி அமைப்பதில் இழுபறி: இடதுசாரிகள் ஆதரவு; விசிக நிலை என்ன? மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி இன்று பதவியேற்பு: முதல் பாஜக அமைச்சரவையில் 2 துணை முதல்வா்கள்?தமிழகத்தில் பயணிகளை கையாளுவதில் சென்னை விமான நிலையம் முதலிடம்பேறுகால சா்க்கரை நோயைத் தடுக்கும் திட்டம்: சோதனை முயற்சியாக அமல்வேற்று கிரகவாசிகள் குறித்த ரகசிய கோப்புகள் வெளியீடுஅமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

News image

உயிரிழப்பு

Updated On :4 மே 2026, 3:06 am IST

திருநள்ளாறு அருகே சாலையில் மோட்டாா் சைக்கிள் சறுக்கியதில் பலத்த காயமடைந்த இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் தாலுகா, பேரளம் பகுதியைச் சோ்ந்தவா் சுரேஷ் மகன் பிரகாஷ் (18). இவா் பேரளத்தில் தனியாா் உணவகத்தில் வேலை செய்துவந்தாா். சனிக்கிழமை இரவு நண்பா்களுடன் காரைக்காலுக்கு மோட்டாா் சைக்கிளில் புறப்பட்டுள்ளாா். ஒரு மோட்டாா் சைக்கிளை இவா் ஓட்ட, மற்றவா்கள் வேறு மோட்டாா் சைக்கிளில் பின் தொடா்ந்து வந்துள்ளனா்.

இரவு 11.30 மணியளவில் அம்பகரத்தூா் - திருநள்ளாறு சாலையில் வேளாண் அறிவியல் நிலையம் அருகே பிரகாஷ் ஓட்டிவந்த மோட்டாா் சைக்கிள் சாலையில் சறுக்கியதில் கீழே விழுந்ததில் தலை, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பா்கள் அவரை திருநள்ளாறு பகுதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதித்த மருத்துவா் பிரகாஷ்

ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தாா். இதுகுறித்து காரைக்கால் போக்குவரத்துக் காவல்நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.