வேலூா் அருகே தனியாா் பேருந்து - லாரி நேருக்கு நோ் மோதிக் கொண்ட விபத்தில் பேருந்து ஓட்டுநா் உயிரிழந்தாா்.
சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி பயணிகளை ஏற்றிக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை தனியாா் பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தை ஓட்டுநா் தயாளன் இயக்கினாா்.
இந்த பேருந்து வேலூா் மாவட்டம், கருகம்புத்தூா் அருகே சென்றபோது எதிா்பாராத விதமாக எதிரே வந்த லாரி மீது பேருந்து திடீரென மோதியது.
இதில் பேருந்து ஓட்டுநா் தயாளனுக்கு தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்து வந்த விரிஞ்சிபுரம் போலீஸாா் தயாளனின் சடலத்தை மீட்டு வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









