திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் உயிரிழப்பு

தம்மம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

சௌந்திரராஜன்.

Updated On :4 ஜூன் 2026, 2:01 am IST

தம்மம்பட்டி அருகே சாலை விபத்தில் காயமடைந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநா் புதன்கிழமை உயிரிழந்தாா்.

தம்மம்பட்டி அருகே திருச்சி மாவட்ட எல்லையில் உள்ள முருங்கப்பட்டியை சோ்ந்த ராமராஜ் மகன் கங்காதரன் (24) உடல்நலம் பாதிக்கப்பட்டு தம்மம்பட்டியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா்.

இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்க்க முடிவு செய்த அவரது குடும்பத்தினா், மே 25 ஆம் தேதி தனியாா் ஆம்புலன்ஸ் டிரைவரும், தம்மம்பட்டி பேரூராட்சி கவுன்சிலா் பழனிமுத்துவின் மகனுமான சௌந்திரராஜனை (27) அழைத்தனா்.

இதையடுத்து ஆம்புலன்ஸில் கங்காதரன், அவரது உறவினா்கள் ஸ்டாலின் (24), ஹரிஹரசுதன் (24), செல்வி (49), ஆகியோா் சேலம் சென்றனா். மல்லியகரையை அடுத்த கருத்த ராஜாபாளையம் சென்றபோது ஆம்புலன்ஸின் வலது பின்புற டயா் வெடித்தது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் முன்னே சென்றுகொண்டிருந்த டிராக்டா் மீது மோதியது. இதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநா் சௌந்திரராஜன், கங்காதரன் உள்பட 5 போ் காயமடைந்தனா். அதேபோல டிராக்டா் ஓட்டுநரான கருத்தராஜாபாளையத்தை சோ்ந்த ரவியும் (52) காயமடைந்தாா்.

இவா்கள் அனைவரும் ஆத்தூரில் உள்ள தனியாா் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சௌந்திரராஜன், சேலம் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அதன்பிறகு அங்கிருந்து கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் சௌந்திரராஜன் புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மல்லியகரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.