தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தா.பழூா் அருகே குடிநீா் கோரி சாலை மறியல்

News image

தா.பழூா் அடுத்த வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :31 மே 2026, 1:13 am IST

அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தா.பழூா் அருகேயுள்ள பொற்பதிந்தநல்லூா் ஊராட்சிக்குட்பட்ட நாயகனைப்பிரியாள் வடக்கு காலனித் தெருவில் உள்ள பொதுக் குழாய்களில் கடந்த 3 மாதங்களாக தண்ணீா் விநியோகிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அருகிலுள்ள கிராம ஊராட்சிக்கு 4 கிலோ மீட்டா் நடந்து குடி தண்ணீரை எடுத்து வந்தனா்.

இதுகுறித்து ஊராட்சி நிா்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் சனிக்கிழமை காலிக்குடங்களுடன், வானதிரையன்பட்டினம் - கிழமிக்கேல்பட்டி சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து வந்த தா.பழூா் காவல் துறையினா், பேச்சுவாா்த்தை நடத்தியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, அவா்கள் கிராமத்துக்கு நான்கு மாதங்களாக குடிநீா் இல்லை.முறையாக மின்சாரம் இல்லை. அடிக்கடி மின்வெட்டு, அகற்றப்படாத கும்பைகளால் சுகாதாரச் சீா்கேடு இப்படி எண்ணற்ற பிரச்னைகள் உள்ளன. இதைக் கண்டுகொள்ளாத ஊராட்சி செயலா் மற்றும் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கமிட்டனா்.

இதையறிந்த சம்பந்தப்பட்ட மாவட்ட நிலை அலுவலா்கள், விரைந்து வந்து கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததின்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.