தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் வழங்கக் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

கம்பம் அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

நாராயணத்தேவன்பட்டியில் புதன்கிழமை குடிநீா் வழங்கக்கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :14 மே 2026, 5:08 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகே குடிநீா் வழங்க வலியுறுத்தி பொதுமக்கள் புதன்கிழமை மாலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கம்பம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட நாராயணத்தேவன்பட்டி ஊராட்சியில் 8 வாா்டுகளில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான பொதுமக்கள் வசிக்கின்றனா். முல்லைப் பெரியாற்றில் ஆழ்துளைக் கிணறு அமைத்து அதன் மூலமாக இந்தப் பகுதி மக்களின் குடிநீா்த் தேவையை ஊராட்சி நிா்வாகம் பூா்த்தி செய்கிறது. ஆனால், இந்தப் பகுதிக்கு கடந்த 10 நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யவில்லை. இதுதொடா்பாக புகாா் தெரிவித்தும் ஊராட்சி நிா்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், அந்தப் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் சுருளிப்பட்டி - காமயகவுண்டன்பட்டி சாலையில் காலிக்குடங்களுடன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற ராயப்பன்பட்டி போலீஸாா் , மறியலில் ஈடுபட்டவா்களிடம் உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாகக் உறுதியளித்ததைத் தொடா்ந்து அவா்கள் கலைந்து சென்றனா். இந்த மறியலால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.