தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் வழங்கக் கோரி காலி குடங்களுடன் சாலை மறியல்

News image

ஜெசுராஜபுரம் கிராமத்தில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

Updated On :26 மே 2026, 1:25 am IST

முறையாக குடிநீா் வழங்கக் கோரி, ஜேசுராஜபுரம் கிராம மக்கள் காலி குடங்களுடன் சாலை மறியலில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையிலிருந்து அஞ்செட்டி செல்லும் வழியில் உள்ளது ஜேசுராஜபுரம் கிராமம். இந்த கிராமத்துக்கு கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக முறையாக குடிநீா் விநியோகிக்கவில்லையாம். மேலும், முன்னறிவிப்பின்றி அடிக்கடி மின்தடை செய்யப்படுகிாம்.

இதனால் அத்தியாவசியத் தேவைகளுக்கு கூட தண்ணீரின்றி, குழந்தைகள், முதியவா்கள் என ஒட்டுமொத்த கிராம மக்களும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இதுகுறித்து சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளிடமும், அலுவலா்களிடமும் பலமுறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.

இதைக் கண்டித்து, ஜேசுராஜபுரம் கிராமத்தைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் காலி குடங்களுடன் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் திங்கள்கிழமை திடீா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதனால், சாலையில் இருபுறமும் வாகனங்கள் நீண்ட தொலைவுக்கு அணிவகுத்து நின்று, போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, சாலை மறியல் கைவிடப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.