அரியலூா் மாவட்டம், தா.பழூா் அருகே குடிநீா் கேட்டு கிராம மக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தா.பழூா் அருகேயுள்ள சிலால் கிராமத்தில் சுமாா் 1000-த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகிக்கப்படவில்லையாம்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள், பலமுறை ஊராட்சி, ஒன்றிய அலுவலங்களில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குடிநீருக்காக சிரமப்பட்டு வந்த அப்பகுதி மக்கள், வியாழக்கிழமை கும்பகோணம்--ஜெயங்கொண்டம் சாலையில் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினா், சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










