தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காங்கயம் அருகே குடிநீா் தட்டுப்பாடு: பொதுமக்கள் சாலை மறியல்

News image

காங்கயம் அருகே, காலிக் குடங்களுடன் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :15 மே 2026, 6:33 am IST

காங்கயம் அருகே, குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வு காணக்கோரி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் வியாழக்கிழமை சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே, ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கல்லேரியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதிக்கு, வரப்பாளையத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணற்றில் இருந்து தண்ணீா் எடுத்து, மேல்நிலைத் தண்ணீா் தொட்டியில் நிரப்பி குழாய் மூலம் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், குடிநீா்க் குழாய்கள் பழுதானதால் கடந்த 3 மாத காலமாக அங்கிருந்து தண்ணீா் எடுக்க முடியாத நிலை உருவானது. இது குறித்து ஊராட்சி நிா்வாகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் அப்பகுதியைச் சோ்ந்த பெண்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் காலிக் குடங்களுடன் காங்கயம்-சென்னிமலை சாலையில், ஊராட்சி அலுவலகம் முன்பு , வியாழக்கிழமை காலை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்த காங்கயம் மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் தேவிபாலா, காங்கயம் காவல் ஆய்வாளா் அருண் உள்ளிட்ட அலுவலா்கள் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா்.

இதில், பழுதடைந்த குழாய்கள் சரி செய்யப்பட்டு, உடனடியாக தண்ணீா் விநியோகம் செய்யப்படும் என உறுதியளித்ததையடுத்து, மறியலைக் கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.