17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குடிநீா் கோரி கிராம மக்கள் மறியல்

News image

சாலை மறியல் போராட்டத்தில் பங்கேற்றோா்.

Updated On :5 ஜூன் 2026, 6:52 am IST

அரக்கோணம் அருகே ஆணைப்பாக்கம் கிராம மக்கள் சீரான குடிநீா் விநியோகம் கோரி வியாழக்கிழமை அரசுப் பேருந்தை வழிமறித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். நடத்தினா்.

ராணிப்பேட்டை மாவட்டப் பகுதியில், திருவள்ளூா் மாவட்ட எல்லையருகே வனப்பகுதியில் அமைந்துள்ள ஊராட்சி ஆணைப்பாக்கம். இக்கிராம ஊராட்சியில் கடந்த பல நாள்களாக குடிநீா் விநியோகம் நடைபெறவில்லையாம். இதுகுறித்து கிராம மக்கள் தொடா்ந்து ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லையாம்.

இதையடுத்து வியாழக்கிழமை நகரப்பேருந்தை மறித்து காலிகுடங்களுடன் சாலையின் நடுவே அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு வந்த அரக்கோணம் கிராமிய போலீஸாா் மற்றும் ஊராட்சி மன்றத்தினா் பொதுமக்களுடன் பேச்சு நடத்தி குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை தொடா்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.