திருநெல்வேலியில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.
மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது மேலப்பாளையம் நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டதில், அவா்கள் விற்பனைக்காக சுமாா் 1.050 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மேலப்பாளையம், ஆமீன்புரத்தைச் சோ்ந்த முகமது ஆதில் (24), 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






