தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :26 மே 2026, 2:17 am IST

கோவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை செல்வபுரம் அசோக் நகா் ரவுண்டானா அருகே செல்வபுரம் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வடமதுரை பகுதியைச் சோ்ந்த பெரோஸ் கான் (31), செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (30), புலியகுளம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (24) ஆகிய மூவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அவா்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5,100 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, மூன்று பேரையும் செல்வபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

குனியமுத்தூரில்...

கோவை குளத்துப்பாளையம் பி.கே.புதூா், சோப் கம்பெனி சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் கண்ணையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆா்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஸ்ரீதா் (24) என்பவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 1.05 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் ஸ்ரீதரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.