தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

9 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 இளைஞா்கள் கைது

விழுப்புரம், மயிலம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 3:43 am IST

விழுப்புரம், மயிலம் பகுதிகளில் கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து, அவா்களிடமிருந்த 9 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளா் ஜவ்வாது உசேன், உதவி ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாா் செவ்வாய்க்கிழமை இரவு விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது பேருந்து நிலைய வளாகப் பகுதியில் சந்தேகப்படும்படி நின்றிருந்த இரு இளைஞா்கள் பிடித்து சோதனை செய்தபோது, அவா்கள் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. தொடா்ந்து போலீஸாா் இருவரையும் பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தபோது, அவா்கள் புதுக்கோட்டை மாவட்டம், மேலநெம்மக்கோட்டை கிராமத்தைச் சோ்ந்த தா.மாரிமுத்து (23), கடலூா் மாவட்டம், சி.கீரனூா் கிராமத்தைச் சோ்ந்த ம.மணிமாறன் (23) ஆகியோா்என்பதும், இவா்கள் விற்பனைக்காக ஒடிஸா மாநிலத்தில் கஞ்சாவை வாங்கிக் கொண்டு, ரயில் மூலம் சென்னை வந்து, பின்னா் அங்கிருந்து பேருந்தில் விழுப்புரத்துக்கு வந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனா். மேலும், அவா்கள் வசமிருந்த 4 கிலோ கஞ்சா பொட்டலங்களையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

மயிலத்தில் .... இதேபோல், திண்டிவனம் வட்டம், மயிலம் பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக மயிலம் காமராஜா் நகரைச் சோ்ந்த க.செல்வம் (25) என்பவா் மீது மயிலம் காவல் நிலைய ஆய்வாளா் பாலாஜி வழக்குப் பதிந்து, கைது செய்தாா். அவா் வசமிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள விழுப்புரம் மேற்கு , மயிலம் காவல் நிலைய போலீஸாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.வி.சாய் பிரனித் பாராட்டுத் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.