பல்லடத்தில் தலா ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்த போலீஸாா், பிகாா் மாநில இளைஞரைக் கைது செய்தனா்.
பல்லடம் அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதான பகுதியில் போலீஸாா் வழக்கமான ரோந்து பணியில் ஞாயிற்றுக்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த நபரிடம் விசாரணை மேற்கொண்டனா்.
இதில், அவா் பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த கஜேந்திரகுமாா் (26) என்பதும், கஞ்சா, கஞ்சா சாக்லேட் விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, கஜேந்திரகுமாரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த தலா ஒரு கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட்டை பறிமுதல் செய்தனா்.
பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






