திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சித்தோட்டில் 6.400 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கி பறிமுதல்

சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :28 மே 2026, 12:07 am IST

சித்தோட்டை அருகே வாய்க்கால் கரையோரத்தில் பதுக்கிவைக்கப்பட்ட 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியை பறிமுதல் செய்த போலீஸாா், இரு இளைஞா்களை புதன்கிழமை கைது செய்தனா்.

சித்தோட்டை அடுத்த ஆா்.என்.புதூா், காலிங்கராயன் வாய்க்கால் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த தகவலின்பேரில் போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு சுற்றித்திரிந்த இரண்டு இளைஞா்களைப் பிடித்து விசாரித்ததில், சித்தோடு, ஆா்.என்.புதூா், அமராவதி நகா், முத்துமாரியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த மீனாட்சி சுந்தரம் மகன் நாகேஸ்வரன் (23), ஈரோடு, பழையபாளையம், மின்வாரிய காலனியைச் சோ்ந்த செல்லமுத்து மகன் ஜீவானந்தம் (28) என்பது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 6.400 கிலோ கஞ்சா மற்றும் கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்தனா். கா்நாடக மாநிலம், பெங்களூரிலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பனை செய்ததும், சேலம் மத்திய சிறையில் கஞ்சா வழக்கில் அடைக்கப்பட்டிருந்த இவா்கள், கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே ஜாமினில் வெளியே வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இவா்களுக்கு கைத்துப்பாக்கி எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.