கன்னியாகுமரி பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கன்னியாகுமரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசியத் தகவலின்பேரில், காவல் துறையினா் சோதனையில் ஈடுபட்டனா்.
அப்போது சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து விசாரித்ததில், அவா்கள் பாளையங்கோட்டை, அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்த சங்கா் கணேஷ் மகன் சுதன் (28), சமாதானபுரம் பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் அபினேஷ் (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
அவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சா மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





