பெரம்பலூா் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த 8 கிலோ கஞ்சாவை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை அருகேயுள்ள அன்னமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் பெரியசாமி மகன் சந்தோஷ் (32). இவா், தனது வீட்டில் கஞ்சா வைத்திருப்பதாக அரும்பாவூா் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டுக்குச் சென்ற போலீஸாா் சோதனையிட்டபோது, 8 கிலோ கஞ்சாவை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல்செய்த போலீஸாா், சந்தோஷை கைது செய்து பெரம்பலூா் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், மதுவிலக்குப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து சந்தோஷிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







