கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் அ.பாண்டிச்செல்வி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை மதனகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஒரு பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் அஞ்சல், கோங்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(24), குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் அஞ்சல், அப்பியம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜபூபாலன்(24) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இருவரையும் நீதி மன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








