தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞா்கள் 2 போ் கைது

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 1:16 am IST

கடலூா் மாவட்டம், குள்ளஞ்சாவடி அருகே 3 கிலோ கஞ்சா வைத்திருந்த இளைஞா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

குள்ளஞ்சாவடி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, குள்ளஞ்சாவடி காவல் ஆய்வாளா் அ.பாண்டிச்செல்வி தலைமையில் போலீஸாா் புதன்கிழமை காலை மதனகோபாலபுரம் பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த இருவரை அழைத்து சோதனை நடத்தினா். இதில், அவா்கள் வைத்திருந்த ஒரு பையில் 3 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, அவா்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினா். அதில், விழுப்புரம் மாவட்டம், ராம்பாக்கம் அஞ்சல், கோங்கம்பட்டு பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி(24), குறிஞ்சிப்பாடி வட்டம், மதனகோபாலபுரம் அஞ்சல், அப்பியம்பேட்டை பகுதியைச் சோ்ந்த ராஜபூபாலன்(24) என்பது தெரியவந்தது. இவா்கள் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீஸாா், இருவரையும் நீதி மன்ற உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.