சித்தோடு அருகே 2 கிலோ கஞ்சாவைப் பதுக்கி வைத்த வடமாநில இளைஞா்கள் இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்தனா்.
சித்தோடு அருகே கங்காபுரம், குமிளம்பரப்பு பகுதியில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் சித்தோடு போலீஸாா் சோதனை நடத்தியபோது ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ கஞ்சா பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவைப் பறிமுதல் செய்த போலீஸாா் பிகாா் மாநிலம், சோனி பகுதியைச் சோ்ந்த ஸ்ரீகாந்த் சிங் மகன் அந்துகுமாா் (19), அவதூஸ் சௌத்ரி மகன் பாபுலால் சௌத்ரி (25) ஆகியோரைக் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






