திருக்குறுங்குடி அருகே கஞ்சா, போதை சாக்லெட்டை பதுக்கி விற்பனை செய்ய முயன்ாக இளைஞரை, போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
திருக்குறுங்குடி காவல் ஆய்வாளா் கண்ணாகாந்தி தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருக்குறுங்குடி தனியாா் பள்ளி அருகே உள்ள காலியிடத்தில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்று கொண்டிருந்த மாவடி ராமச்சந்திரபுரத்தைச் சோ்ந்த கபிலன் (22) என்பவரை சோதனை செய்தனா்.
அப்போது விற்பனை செய்வதற்காக பதுக்கி வைத்திருந்த 825 கிராம் கஞ்சா, 325 கிராம் போதை சாக்லெட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். இதையடுத்து போலீஸாா் வழக்குப் பதிந்து கபிலனை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







