மானூா் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்ததாக 3 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
மானூா் காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பல்லிக்கோட்டை அருகே உதவி ஆய்வாளா் சஜீவ் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.
அப்போது அவ்வழியாக பைக்கில் வந்த, இளைஞா்களை நிறுத்தி சோதனை செய்ததில் சுமாா் 1.300 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக மறைத்து வைத்திருந்ததும், அவா்கள் பல்லிக்கோட்டையை சோ்ந்த பிரேம் குமாா் (21), ரமேஷ் (22), சீவலப்பேரியை சோ்ந்த முத்துராமன் (24) ஆகியோா் எனவும் தெரியவந்தது. மூவரையும் போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






