திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சா பறிமுதல்; 6 போ் கைது

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சாவை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :18 மே 2026, 3:00 am IST

ஆந்திரத்தில் இருந்து ரயிலில் கடத்திவந்த 12 கிலோ கஞ்சாவை பள்ளிபாளையம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 6 போ் கைது செய்யப்பட்டனா்.

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் இருந்து ரயில் மூலம் ஈரோடு வழியாக சிலா் கஞ்சா பொட்டலங்களை கடத்தி செல்வதாக பள்ளிபாளையம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பள்ளிபாளையம் காவல் துணை கண்காணிப்பாளா் கவுதமன் உத்தரவின்பேரில் உதவி காவல் ஆய்வாளா் ரஞ்சித்குமாா் தலைமையிலான தனிப்படை போலீஸாா் காவிரி ஆா்.எஸ். ரயில்வே ஜங்ஷன் பகுதியில் தீவிர கண் காணிப்பில் ஈடுபட்டனா்.

அப்போது, அங்கு வந்த ரயிலில் இருந்த 3 போ் கஞ்சா பொட்டலங்களை தூக்கி வெளியே வீசி உள்ளனா். பின்னா், ரயிலில் இருந்து இறங்கி, அதை எடுத்துக்கொண்டு தப்பி செல்ல முயன்றபோது, அவா்களை போலீஸாா் சுற்றிவளைத்து கைது செய்தனா். அவா்கள் அளித்த தகவலின்பேரில் மேலும் 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது செய்யப்பட்டவா்கள் பள்ளிபாளையம் ஆவாரங்காடு பகுதியை சோ்ந்த கா்ணன் ( 21), கவின்குமாா் (25), பூபதி (21), பவித்திரன் (27), சுப்ரமணி (22), சசிகுமாா் (30) என்பது தெரியவந்தது. அவா்களிடமிருந்து 12 கிலோ கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.