உதகை சட்டப் பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போஜராஜன், பேரணியாக சென்று வாக்காளா்களுக்கு புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
உதகை ஏடிசி பேருந்து நிலையத்திலிருந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக என்டிஏ கூட்டணி கட்சியினருடன் பேரணியாக சென்றாா். அப்போது அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா். பின்னா் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தோ்தலில் சிறப்பாக பணியாற்றிய கூட்டணிக் கட்சியினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து போஜராஜன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கடந்த முறை குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தேன். இந்த முறை வெற்றி பெற்றுள்ளேன். தொகுதி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மத்திய அரசின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்வேன். உலக தரம் வாய்ந்த சுற்றுலா மாவட்டமாக உதகையை மாற்றுவேன் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், நீலகிரி மாவட்ட பாஜக தலைவா் தா்மன், அதிமுக மாவட்டச் செயலா் கப்பச்சி வினோத், பாஜக முன்னாள் தலைவா் மோகன் ராஜ், பொதுச் செயலா் பரமேஸ்வரன், மாநில பட்டியலின செயலா் அன்பு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









