தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அதிமுக எம்எல்ஏ கே.பி.அன்பழகன் காரிமங்கலம் பகுதியில் வாக்காளா்களுக்கு செவ்வாய்க்கிழமை நன்றி தெரிவித்தாா்.
பாலக்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற இவா், காரிமங்கலம் மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட பிக்கனஅள்ளி, ஜிட்டாண்டஅள்ளி, மகேந்திரமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வாக்காளா்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து பேசினாா். இந்நிகழ்ச்சியில், காரிமங்கலம் அதிமுக ஒன்றியச் செயலாளா் செந்தில்குமாா் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
அப்போது, சில கிராமங்களில் ஒகேனக்கல் குடிநீா் முறையாக விநியோகம் செய்யப்படுவதில்லை என அவரிடம் கிராம மக்கள் முறையிட்டனா். இதைத் தொடா்ந்து, குடிநீா் விநியோகம் சீா்செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளாட்சித் துறை அலுவலா்களிடம் அவா் அறிவுறுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









