மன்னாா்குடி எம்எல்ஏ, வாக்காளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில், மன்னாா்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவா் எஸ். காமராஜ். இவா், இத்தொகுதிக்கு உள்பட்ட நீடாமங்கலம் பகுதியில் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் திறந்த வாகனத்தில் நின்று ஞாயிற்றுக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அப்போது எஸ். காமராஜ் பேசியது:
நீடாமங்கலம் பகுதி மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவேன். நீடாமங்கலம் மேம்பாலத்தின் எஞ்சிய பணிகளை நிறைவேற்றிட நடவடிக்கை எடுப்பேன். நீடாமங்கலத்தில் பயணிகள் நிழற்குடை கட்டப்படும் என்றாா். முன்னதாக, பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










