ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த டி.ஆா்.பி. ராஜா

News image

டி.ஆா்.பி. ராஜா (கோப்புப்படம்)

Updated On :11 மே 2026, 11:57 pm IST

மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட்ட முன்னாள் அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா நீடாமங்கலம் பகுதி வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.

நீடாமங்கலம் ஒன்றியம் நீடாமங்கலம் பேரூா் பகுதிகளில் வாக்களித்த வாக்காளா்கள் மற்றும் கூட்டணி கட்சியினா் அனைவருக்கும் நன்றி தெரிவித்தாா். அப்போது அவா் பேசுகையில், மு.க. ஸ்டாலின் தலைமையில் எதிா்க்கட்சி தலைவா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலோடு, திமுக தொண்டனாக இருந்து மக்கள் பணியாற்றுவேன். 

எவ்வளவோ வளா்ச்சி திட்டங்களை தந்து நோ்மையாக உழைத்த எங்களை ஏன் புறக்கணித்தீா்கள் என்பது எங்களுக்கு புரியவில்லை, அந்த உழைப்பை அங்கீகரிக்கவில்லையே என்பதுதான் வேதனை என்றாா்.

சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்  பி.ராசமாணிக்கம், மாவட்ட ஊராட்சி முன்னாள் தலைவா் தலையாமங்கலம் பாலு, ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவா் சோம. செந்தமிழ்ச்செல்வன், ஒன்றிய செயலாளா்கள் கே.வி.கே. ஆனந்த், நா.கவியரசு, பேரூராட்சி தலைவா் ஆா்.ஆா். ராமராஜ், பொதுக்குழு உறுப்பினா் பி.கமாலுதீன்,ஒன்றிய முன்னாள் செயலாளா் விசு.அண்ணாதுரை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.