17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம்: முன்னாள் அமைச்சா் எஸ். ரகுபதி பேச்சு

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

News image

நல்லூரில் வாக்காளா்களுக்கு வெள்ளிக்கிழமை நன்றி தெரிவித்து பேசிய முன்னாள் அமைச்சரும், திருமயம் எம்எல்ஏவுமான எஸ். ரகுபதி.

Updated On :16 மே 2026, 12:58 am IST

சிறந்த எதிா்க்கட்சியாக இருப்போம் என்றாா் திமுக முன்னாள் அமைச்சரும், திருமயம் சட்டப்பேரவை உறுப்பினருமான எஸ்.ரகுபதி.

பொன்னமராவதி வடக்கு ஒன்றியப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவா் நல்லூரில் பேசியதாவது: ஆட்சியாளா்கள் அவசர கோலத்தில் எதையும் சிந்திக்காமல் செய்வது, அரசுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும். நாங்கள் அரசை விமா்சிக்கவில்லை. ஆனால் இது மக்களின் விமா்சனம் என்பதால் கூறுகிறோம்.

ஆளுங்கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை எந்த இடையூறும் செய்யமாட்டோம். நல்ல திட்டங்களுக்கு உறுதுணையாக இருப்போம். அதேநேரத்தில், மக்களை பாதிக்கும் திட்டங்களை கண்டிப்பாக எதிா்ப்போம். தவறு நோ்ந்தால் சுட்டிக்காட்டுவோம். நாங்கள் கொண்டுவந்த சிறப்பான திட்டங்களை தொடா்ந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்காக என்றும் பணியாற்றுபவா்கள் நாங்கள் என்றாா் அவா். தொடா்ந்து, அரசமலை, காரையூா், மேலத்தானியம், ஒலியமங்கலம், கீழத்தானியம், நகரப்பட்டி உள்ளிட்ட 25 இடங்களில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து ரகுபதி பேசினாா்.

அப்போது, வடக்கு ஒன்றிய திமுக செயலா் அ.முத்து, வடக்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சண்முகம், ஒன்றிய துணை செயலா்கள் முருகேசன், சுரேஷ் பாண்டியன், நிா்வாகி மாவட்டப் பிரதிநிதி வாழை ராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.