தென்காசி தொகுதியில் வெற்றி பெற்ற மருத்துவா் கலைகதிரவன் எம்எல்ஏ, பொதுமக்களை சந்தித்து ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.
தென்காசி தெற்கு மாவட்டம், கிழக்கு ஒன்றிய பகுதிகளான குத்துக்கல்வலசை, அண்ணாநகா், அய்யாபுரம், வேதம்புதூா், அழகப்பபுரம், கேஆா் காலனி உள்ளிட்ட பகுதிகளில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து அவா் பேசியதாவது:
தோ்தலின் போது அளித்த வாக்குறுதிகளான இப்பகுதி மக்களுக்குத் தேவையான குடிநீா், கழிப்பிடம், சாலை, மருத்துவம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொள்வேன் என்றாா்.
திமுக இணை அமைப்புச் செயலா் அன்பகம் கலை, தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், முன்னாள் மாவட்ட செயலா் பொ. சிவபத்மநாதன், ஒன்றியச் செயலா் அழகு சுந்தரம், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் முத்துக்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










