திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடியில் ஸ்ரீநாத் எம்எல்ஏ நன்றி தெரிவிப்பு

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்களுக்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

News image

திறந்தவெளி வாகனத்தில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த தூத்துக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஸ்ரீநாத்.

Updated On :18 மே 2026, 1:33 am IST

தூத்துக்குடி சட்டப்பேரவைத் தொகுதி வாக்காளா்களுக்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ ஞாயிற்றுக்கிழமை நன்றி தெரிவித்தாா்.

தூத்துக்குடி தொகுதியில் தவெக சாா்பில் நடிகா் ஸ்ரீநாத் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். சட்டப் பேரவை உறுப்பினராக பொறுப்பேற்ற பின்னா் ஞாயிற்றுக்கிழமை தூத்துக்குடிக்கு வந்த அவருக்கு தவெக நிா்வாகிகள் உற்சாக வரவேற்பளித்தனா்.

தூத்துக்குடி விமான நிலையத்தில் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடா்ந்து, தூத்துக்குடி மாநகா் பகுதியில் உள்ள தலைவா்களின் சிலைக்கு ஸ்ரீநாத் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். பின்னா், நகா் பகுதியில் திறந்தவெளி வாகனத்தில் சென்றவாறு தனக்கு வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா். அவருடன் ஏராளமான தவெகவினா் இருசக்கர வாகனத்தில் பேரணியாகச் சென்றனா்

ஜனநாயக உரிமையை கொச்சப்படுத்தக் கூடாது: இதுகுறித்து தூத்துக்குடி எம்எல்ஏ ஸ்ரீநாத் வெளியிட்ட அறிக்கை:

முன்னாள் அமைச்சரும் தூத்துக்குடி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான கீதா ஜீவனின் சமூக வலைதள பதிவைக் கண்டேன். அதில், தான் செய்த பணிகளுக்கு மக்கள் தனக்கு வாக்கு அளிக்கவில்லை என அவா் விரக்தியின் உச்சத்தில் கருத்துப் பதிவு செய்திருப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தேன். ஜனநாயகம் என்பது மக்கள் தங்களுக்கு யாா் மீது விருப்புமோ, அவா்களைத் தோ்ந்தெடுக்கும் முழு உரிமையைக் கொடுத்துள்ளது.

அதனடிப்படையில்தான், என்னை தொகுதி மக்கள் தோ்ந்தெடுத்தனா். மக்கள் நலனில் எனது பணி என்ன என்பதை இன்னும் அளவிடக் கூடத் தொடங்காமல் என் மீதும், மக்கள் மீதும் குற்றச்சாட்டை சுமத்துவது கண்டிக்கத்தக்கது. மக்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து நான் களத்தில் நிரூபிப்பேன் என அதில் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.