அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட பல்வேறு கிராமங்களுக்குச் சென்ற அரக்கோணம் தொகுதி தவெக எம்எல்ஏ வி.காந்திராஜ் வாக்களித்த வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
அரக்கோணம் தொகுதி எம்எல்ஏவும், தவெக மாவட்ட செயலாளருமான வி.காந்திராஜ் ஞாயிற்றுக்கிழமை அரக்கோணம் தொகுதிக்குள்பட்ட கிருஷ்ணாபுரம், வளா்புரம், ஈசலாபுரம், பெருமாள்ராஜபேட்டை, தண்டலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா்.
கிருஷ்ணாபுரம் கிராமத்துக்கு வந்த எம்எல்ஏ வி.காந்திராஜை அப்பகுதி மகளிா் மாலை அணிவித்து வரவேற்றனா்.
தொடா்ந்து கிராம வீதிகளில் நடந்து சென்ற எம்எல்ஏ வி.காந்திராஜ் வாக்காளா்களுக்கு ன்றி தெரிவித்ததுடன் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களையும் பெற்றுக் கொண்டாா்.
அப்போது அவருடன் தவெக அரக்கோணம் மேற்கு ஒன்றியச் செயலாளா் ராமராஜ், இணைச் செயலாளா் ராபின், வடக்கு ஒன்றிய செயலாளா் தீபக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









