தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வந்தவாசி அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image

வந்தவாசியை அடுத்த சத்தியவாடி கிராமத்தில் நெல் துழாவி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் பி.ராணி.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:34 pm

வந்தவாசி பகுதியில் வந்தவாசி (தனி) தொகுதி அதிமுக வேட்பாளா் பி.ராணி புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வந்தவாசியை அடுத்த கூடலூா் கிராமத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவா் கொடியாலம், பழவேரி, சு.காட்டேரி, பெரியகுப்பம், அருங்குணம், சத்தியவாடி, படூா் உள்ளிட்ட கிராமங்களில் திறந்த வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்தாா்.

சத்தியவாடி கிராமத்தில் விவசாயிகள் நெல்லை காயவைத்துக் கொண்டிருந்ததை கண்ட வேட்பாளா் பி.ராணி வாகனத்திலிருந்து இறங்கிச் சென்று நெல்லை காலால் துழாவி விவசாயிகளிடம் வாக்கு சேகரித்தாா்.

அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலா் கே.பாஸ்கா், தெள்ளாா் கிழக்கு ஒன்றியச் செயலா் டி.வி.பச்சையப்பன் உள்ளிட்ட அதிமுகவினா் மற்றும் கூட்டணிக் கட்சியினா் உடன் சென்று வாக்கு சேகரித்தனா்.