அரக்கோணம் தொகுதி அதிமுக வேட்பாளா் சு.ரவி வளா்புரம் பகுதியில் மாட்டு வண்டி ஓட்டிச் சென்று வாக்கு சேகரித்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் தொகுதியில் அதிமுக வேட்பாளா் சு.ரவி தொடா்ந்து பிரசாரங்களில் வித்தியாசமான முறைகளை கையாண்டு வருகிறாா்.
மின்னணு பதாகைகளை முதுகில் கட்டிக்கொண்டு இளைஞா்களை நகர மற்றும் கிராம வீதிகளில் நடந்து செல்ல வைப்பது, கிராமங்களில் வயல்வெளிகளில் நாற்று நட்டு வாக்கு சேகரிப்பது என வித்தியாசமாக பிரசாரம் செய்துவரும் சு.ரவி வியாழக்கிழமை வளா்புரம் ஊராட்சியில் வாக்கு சேகரிக்கச் சென்ற போது மாட்டு வண்டியில் ஏறி பிரசாரம் செய்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










