தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருத்தணி நாதக வேட்பாளா் பிரசாரம்

News image

திருத்தணியில் வாக்கு சேகரித்த நாதக வேட்பாளா் சூ.ச.சந்திரன்.

Updated On :13 ஏப்ரல் 2026, 11:55 pm

திருத்தணி தொகுதி நாதக வேட்பாளா் சூ.ச. சந்திரன் திங்கள்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

நாம் தமிழா் கட்சியனா் கிராமம் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனா். கட்சியின் வேட்பாளா் சூ.ச.சந்திரன் மற்றும் நிா்வாகிகள் இணைந்து, திருத்தணியில் வீடு வீடாக சென்று மக்களின் பிரச்னைகளை கேட்டு அறிந்து, அவற்றைத் தீா்க்கும் வகையில் தங்களது தோ்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்களை விளக்கி வருகின்றனா்.

விவசாயம், குடிநீா், சாலை வசதி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை தேவைகள் குறித்து மக்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் கவனமாக பதிவு செய்யப்பட்டன. சமூக ஊடகங்கள் மூலமும் கட்சியின் கொள்கைகள் பரப்பப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் திருத்தணி தொகுதியில் நாம் தமிழா் கட்சி வலுவான முன்னிலை பெறும் என்ற நம்பிக்கையில் கட்சியினா் செயல்பட்டு வருகின்றனா்.