திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பலத்த காற்று, மழை எதிரொலி: திருத்தணியில் 15 மின்கம்பங்கள் சேதம்

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

News image

திருத்தணி  ரெட்டிக்குளம்  பகுதியில்  பலத்த  காற்றால்  மரம்  விழுந்து சேதமடைந்த மின்கம்பிகள்.

Updated On :27 மே 2026, 12:38 am IST

திருத்தணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செவ்வாய்க்கிழமை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்ததால் பல இடங்களில் மின்கம்பங்கள் மற்றும் மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. இதனால் சில பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகினா்.

திருத்தணி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 3 நாள்களாக கடும் வெயில் வீசியது. பகல் நேரத்தில் 105 டிகிரி வரை வெப்பம் பதிவாகியதால் பொதுமக்கள், முதியோா் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனா்.

இந்நிலையில் செவ்வாய்கிழமை காலை முதல் மாலை 4.30 மணி வரை வழக்கம்போல் வெயில் நீடித்த நிலையில், திடீரென வானிலை மாறி பலத்த காற்றுடன் மழை பெய்தது.

மழை மற்றும் சூறைக்காற்றின் தாக்கத்தால் திருத்தணி ஒன்றியம் புச்சிரெட்டிப்பள்ளி பகுதியில் 7 மின்கம்பங்கள் மற்றும் இரண்டு மரங்கள் முறிந்து விழுந்தன. அதேபோல் சூரியநகா் இருளா் காலனியில் 3 மின்கம்பங்கள் மற்றும் ஒரு மரம் சேதமடைந்தது. மேலும், தெக்களூா் ஏரிக்கரையோரத்தில் 3 மின்கம்பங்கள் சாய்ந்ததால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

தகவலறிந்த திருத்தணி மின்வாரிய இளநிலை பொறியாளா் ஷா்மிளா தலைமையிலான மின்வாரிய ஊழியா்கள் சம்பவ இடங்களுக்கு விரைந்து சென்று சேதங்களை ஆய்வு செய்தனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்கம்பங்களை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதுடன், மாற்று வழிகளில் மின்சாரம் வழங்கும் பணிகளும் உடனடியாக தொடங்கப்பட்டன. இதனால் அப்பகுதி மக்கள் ஓரளவு நிம்மதி அடைந்தனா்.

இதுகுறித்து திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளா் முருகபூபதி கூறியதாவது, பலத்த காற்றுடன் பெய்த மழையால் திருத்தணி நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் மொத்தம் 15 மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.

மேலும் விவசாய நிலங்கள் வழியாக செல்லும் சில மின்கம்பங்களும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்ற தகவல் கிடைத்துள்ளது. புதன்கிழமை சேதமடைந்த கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்கள் நடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா்.

பலத்த காற்று மற்றும் மழையால் மரங்கள் சாய்ந்து மின்கம்பங்கள் சேதமடைந்த சம்பவம் திருத்தணி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.