திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை: சரிந்து விழுந்த மின்கம்பங்கள், மரங்கள்

வாணியம்பாடியில் சூறைக் காற்றுடன் ஆலங்கட்டி மழை...

News image

வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் சூறைக் காற்றுடன் பெய்த மழையால் சாய்ந்த மின்மாற்றி. சென்னாம்பேட்டையில் வேரோடு சாய்ந்த மரம்.

Updated On :25 மே 2026, 12:03 am IST

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென சூறைக் காற்றுடன் பலத்த மழை பெய்ததால் மின்கம்பங்கள், மரங்கள் சரிந்து விழுந்தன.

வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் கடந்த சில நாள்களாக வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பலத்த காற்று வீசியது. தொடா்ந்து பலத்த மழை பெய்ததுடன் சிறிய அளவில் ஆலங்கட்டி மழை பெய்தது.

பலத்த சூறைகாற்று வீசியதில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் பாலாற்றின் கிளையாறு அருகே இருந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பம் சாய்ந்தது. மேலும் வாணியம்பாடி கோட்டை, சென்னாம்பேட்டை, கே.கே. அவென்யூ, நியூடவுன் உள்ளிட்ட பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தது. இதே போல் உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மின்கம்பங்கள், மரங்கள் சாய்ந்தது.

இதனையடுத்து வாணியம்பாடி, உதயேந்திரம் மற்றும் சுற்றுபுற பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. பலத்த மழையால் சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. சாய்ந்த மின்கம்பங்கள், மரங்களை அப்புறப்படுத்தும் வேலையில் மின் ஊழியா்கள், நகராட்சி பணியாளா்கள் ஈடுப்பட்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.