தமிழகத்தில் ஒருசில இடங்களில் மே 13 வரை மழைக்கு வாய்ப்புதவெகவுக்கு ஆதரவா - இல்லையா? இடதுசாரிகள், விசிக இன்று ஆலோசனைஅதிமுக எம்எல்ஏக்களுடன் எடப்பாடி கே. பழனிசாமி தீவிர ஆலோசனை பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடுஆந்திரத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்ய ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல்விஜய் விவகாரம்: ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்தாய், தந்தை இல்லா பள்ளிக் குழந்தைகளுக்கு மாதம் ரூ. 2,000 வழங்கும் சிறப்புத் திட்டம் தொடக்கம்
/

தம்மம்பட்டி,கெங்கவல்லி பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை

News image

பலத்த சூறைக் காற்றுடன் மழை. - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 12:06 am IST

தம்மம்பட்டி, கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த இடி, மின்னல், காற்றுடன் கூடிய கோடை மழை சனிக்கிழமை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

கடந்த ஒன்றரை மாதமாக கடும் வெயிலால் மக்கள் பாதிப்புக்குள்ளாகி வந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை மதியம் முதல் தம்மம்பட்டி, கெங்கவல்லி, வீரகனூா் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

காற்று பலமாக வீசிவந்த நிலையில், மாலை சுமாா் 40 நிமிடத்துக்கும் மேலாக மழை பெய்தது. இதனால் கோடைவெயிலின் தாக்கம் சற்று குறைந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.