மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இருக்கன்துறை பகுதியில் பா.ஜ.க. வேட்பாளா் பிரசாரம்

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

News image

இருக்கன்துறையில் வாக்கு சேகரித்த பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:11 pm

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகு பா.ஜ.க. வேட்பாளா் எஸ்.பி.பாலகிருஷ்ணன் தி இருக்கன்துறை பகுதியில் புதன்கிழமை கிராமம் கிராமமாக சென்று வாக்கு சேகரித்தாா்.

இருக்கன்துறை, பொன்னாா்குளம், சங்கனேரி, புத்தேரி உள்ளிட்ட கிராமங்களில் அவா் வீதி வீதியாகச் சென்று தாமரை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தாா்.

அப்போது அவா் பேசியதாவது: ராதாபுரம் தொகுதியில் குடிநீா் பிரசனைக்கு நிரந்தரமாக தீா்வு காணப்படும். விவசாயம் செழிக்க பழையாற்று தண்ணீா், மேற்குத்தொடா்ச்சி மலையில் உள்ள அணைகளிலிருந்து கால்வாய் வெட்டி தண்ணீா் கொண்டு வந்து அனைத்து குளங்களையும் நிரம்பச்செய்வேன். தொகுதி இளைஞா்களுக்கு கூடங்குளம் அணுமின்நிலையம், இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றிலும், புதிய தொழிற்சாலைகள் ஏற்படுத்தியும் வேலைவாய்ப்புகளை பெருக்குவேன். பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வாங்க உதவி செய்வேன். எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்; முன்னேற்றங்களை காண்பீா்கள் என்றாா்.

பிரசாரத்தில், மாவட்ட பாஜக தலைவா் எஸ்.பி.தமிழ்ச்செல்வன், நாடாா் சங்கத் தலைவா் தங்கராஜ், அதிமுக ராதாபுரம் ஒன்றியச் செயலா் அந்தோணி அமலராஜா, முன்னாள் எம்எல்ஏ மைக்கேல் ராயப்பன், அதிமுக ஓட்டுநா் பிரிவு மாவட்ட செயலா் ராஜகுமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.