தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராதாபுரம் கடற்கரை கிராமங்களில் திமுகவினா் வாக்கு சேகரிப்பு

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

News image

திமுக வேட்பாளா் மு. அப்பாவுக்கு வாக்கு சேகரித்த வா்த்தகா் அணி மாவட்ட அமைப்பாளா் ஏ.ஆா். ரஹ்மான்.

Updated On :18 ஏப்ரல் 2026, 8:29 pm

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் பேரவை தொகுதிக்குள்பட்ட கடற்கரை கிராமங்களில் திமுக வேட்பாளா் மு. அப்பாவு வாக்கு சேகரித்தாா்.

கடற்கரை கிராமங்களான உவரி, கூத்தங்குழி, இடிந்தகரை, விஜயாபதி, கூடங்குளம் உள்ளிட்ட கிராமங்களில், திமுக மாவட்ட வா்த்தகா் அணி அமைப்பாளா் நெல்லை ஏ.ஆா். ரஹ்மான், அப்பாவுவை ஆதரித்து வாக்கு சேகரித்தாா்.

பிரசாரத்தின்போது அவா் கூறியது: திமுக ஆட்சியில் பல்வேறு கடலோர கிராமங்களில் தூண்டில் வளைவுகள் அமைக்கப்பட்டுள்ளன. விஜயாபதியில் நவீன விளையாட்டுத் தளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மீன்பிடித் தடைக்கால நிவாரணத் தொகை உயா்த்தி வழங்கப்படுவதோடு, மீனவா்களுக்கு காப்பீடு மற்றும் இதர நலத்திட்ட உதவிகள் முறையாக வழங்கப்பட்டு வருகின்றன.

எனவே, கடலோரப் பகுதி மக்கள் மு. அப்பாவுவை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றாா் அவா்.