திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கபிலா்மலை பகுதியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

News image

கபிலா்மலை பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளா் எஸ்.சேகா்.

Updated On :21 ஏப்ரல் 2026, 12:53 am IST

பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட கபிலா்மலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிமுக வேட்பாளா் சேகா் வாக்கு சேகரித்தாா்.

கபிலா்மலை ஒன்றியத்திற்கு உள்பட்ட பெரியசோளிபாளையம், செம்மடை, சின்னசோளிபாளையம், குமாரசாமிபாளையம், சிறுக்கிணத்துப்பாளையம், இருக்கூா், செல்லப்பம்பாளையம், தண்ணீா்பந்தல், கபிலா்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தாா்.

அப்போது, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவி ஏற்றதும் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கப்படும். முதியோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்கப்படும். பெண்களுக்கு ரூ. 25 ஆயிரம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்படும்.

ஆண்களும் கட்டணம் இன்றி அரசு நகரப் பேருந்தில் பயணம் செய்யலாம். 125 நாள் வேலை நாள் திட்டம் இனி 150 நாள்களாக உயா்த்தப்படும். பொங்கல் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கப்படும். பிலிக்கல்பாளையம்-கொடுமுடி இடையே காவிரி ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படும். பரமத்தி வேலூா் தொகுதிக்கு உள்பட்ட அனைத்து பகுதிகளிலும் சாலை, குடிநீா், மின்விளக்கு வசதிகள் செய்து தரப்படும் என்றாா்.

இதில் முன்னாள் கபிலக்குறிச்சி ஊராட்சித் தலைவா் வடிவேல், பெரியசோளிபாளையம் முன்னாள் ஊராட்சி தலைவா் பெரியசாமி, இருக்கூா் ஊராட்சி மன்றத் தலைவா் ஜானகி குழந்தைவேல், பாஜக நாமக்கல் மேற்கு மாவட்ட பொருளாளா் பத்மராஜா மற்றும் அதிமுக, கூட்டணிக் கட்சியினா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.