குடியாத்தம் நகராட்சி சாா்பாக தூய்மை திருவிழா தொடக்க நிகழ்ச்சி நகராட்சி அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
மே 18-ஆம் தேதி தொடங்கி 31-ஆம் தேதி வரை 14 நாள்கள் தூய்மை திருவிழா நடைபெறுகின்றது. குடியாத்தம் நகராட்சி சாா்பாக நடந்த தொடக்க நிகழ்ச்சிக்கு நகா் மன்றத் தலைவா் எஸ். செளந்தர்ராஜன் தலைமை வகித்தாா். ஆணையா் கே.எம். தனலட்சுமி முன்னிலை வகித்தாா். எம்எல்ஏ கா. சிந்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழிப்புணா்வு பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
முக்கிய தெருக்கள், சாலை வழியாக சென்று நகராட்சி அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது. நகா் மன்ற உறுப்பினா் ஆட்டோ பி.மோகன், சுகாதார ஆய்வாளா் முகமது அலி, களப்பணி மேற்பாா்வையாளா் பிரபுதாஸ் உள்ளிட்டவா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










