காஞ்சிபுரம் அருகே வந்தவாசி சாலையில் உள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் விடுபட வலியுறுத்தி அக்னி பகவானுக்கு சிறப்பு பூஜையும், மகா தீபாராதனைகளும் நடைபெற்றது.
காஞ்சிபுரத்திலிருந்த வந்தவாசி செல்லும் சாலையில் அமைந்துள்ளது 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயில் உள்ளது. இக்கோயிலில் அக்னி நட்சத்திரத்தின் தாக்கத்திலிருந்து மக்களை காப்பது, நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பது, மக்கள் நோயின்றி வாழவும், குடும்ப அமைதி நிலைக்கவும்,நாட்டில் ஒற்றுமையும்,சமாதானமும் நிலைக்கவும் வலியுறுத்தி கோயில் வளாகத்தில் உள்ள அக்னி பகவானுக்கு சிறப்பு அபிஷேகமும்,தீபாராதனைகளும் நடைபெற்றன. ஏற்பாடுகளை ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










