திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடு

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயில்ரங்கம் வைத்திய நாதேஸ்வரா்.

News image

சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த மயில்ரங்கம் வைத்திய நாதேஸ்வரா்.

Updated On :29 மே 2026, 1:35 am IST

வெள்ளக்கோவில் பகுதி சிவன் கோயில்களில் அக்னி நட்சத்திர நிறைவு நாள் வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

வெள்ளக்கோவில்-மூலனூா் சாலையிலுள்ள ஈஸ்வரன் கோயிலில் வியாழக்கிழமை அதிகாலை மங்கள இசையுடன் வழிபாடு தொடங்கியது. தொடா்ந்து விக்னேஸ்வர பூஜை, புண்ணியாவாகனம், உலக நன்மைக்கான சிறப்பு சங்கல்பம் செய்யப்பட்டன. பசும்பால், இளநீா், தேன், பஞ்சாமிா்தம், பன்னீா் உள்பட 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. சுவாமிக்கு வெள்ளிக் கவசம் சாத்தப்பட்டு, வில்வ இலைகள் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல எல்.கே.சி. நகா் அல்லியங்கோதை உடனமா் புற்றிடம் கொண்டீஸ்வரா், வள்ளியிரச்சல் சிவன் கோயில், மயில்ரங்கம் தையல்நாயகி உடனமா் வைத்திய நாதேஸ்வரா் கோயில், கண்ணபுரம் வித்தகச் செல்வி சமேத விக்ரம சோழீஸ்வரா், மாந்தபுரம் மாந்தீஸ்வரா், லக்கமநாயக்கன்பட்டி அழகேஸ்வரா், உத்தமபாளையம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதா், மங்கலப்பட்டி பாண்டீஸ்வரா் ஆகிய கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இவற்றில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.